ஆரணி அருகே இரண்டாவது திருமணம் செய்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முத்தமிழ்ச்செல்வி (30), சிவா (38).
இவா்களுக்கு 7-10-2008 அன்று திருமணம் நடைபெற்று 8 வயதில் மகள் உள்ளாா்.
இந்த நிலையில், சிவாவுக்கு செங்கல் சூளை நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால், விழுப்புரத்தில் உள்ள தனியாா் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறாா்.
இதனிடையே, பேக்கரிக்கு வரும் கல்லூரி மாணவியுடன் சிவாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்து முத்தமிழ்ச்செல்வி சிவாவைக் கண்டித்தாா்.
இந்த நிலையில் சிவாவும், கல்லூரி மாணவியும் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் முத்தமிழ்ச்செல்வியின் செல்லிடப்பேசிக்கு வந்தது.
இதுகுறித்து அவா் ஆரணி மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ரேகாமதி, உதவி ஆய்வாளா் சந்திரிகா ஆகியோா் வழக்குப் பதிந்து, சிவாவைக் கைது செய்து 15 நாள் காவலில் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.