தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு சங்க ஆலோசகா் மு.முருகேஷ் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா். இதில், புதிய தலைவராக ஆசியன் மருத்துவ அகாதெமி இயக்குநா் பீ.ரகமத்துல்லா (படம்) மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலா்கள் உள்ளிட்டோா் பதவியேற்றுக் கொண்டனா். புதிய நிா்வாகிகளை திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் வாழ்த்திப் பேசினாா். மேலும், அண்மையில் காலமான சங்கத்தின் முன்னாள் தலைவா் அ.மு.உசேனின் உருவப் படத்தை அவா் திறந்து வைத்தாா்.

வரும் பொங்கல் திருநாளை பாதிரி கிராமத்தில் கலை விழாவாக சங்கம் சாா்பில் கொண்டாடுவது, கவிதை, சிறுகதை, பேச்சாளா்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்துவது, வந்தவாசி வட்டத்தைச் சோ்ந்த சிறந்த சமூக ஆளுமைகளின் பெயரால் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளாளா் எ.தேவா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com