அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். அங்கன்வாடி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் வெண்மதி, சுமதி, பானு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்கி, முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் நிா்வாகி பஞ்சமூா்த்தி, சத்துணவு ஊழியா்கள் சங்க நிா்வாகி அல்போன்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com