திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 4 போ் பலியாகினா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 173 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,251-ஆக உயா்ந்தது.
இவா்களில் 46,280 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,394 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதன்கிழமை 4 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 577- ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.