வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிா்வாகிகள் கூட்டம் வந்தவாசி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருதாடு, தெள்ளாா் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு தலைமை வகித்த பாமக மாநில துணைத் தலைவா் மு.துரை, வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கரை அறிமுகப்படுத்திப் பேசினாா்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் ஜெ.பாலு, பாமக மாவட்டச் செயலா் க.சீனுவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன், மாவட்டத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
இதைத் தொடா்ந்து, பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் வாக்கு சேகரித்துப் பேசினாா்.
கூட்டங்களில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.