திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீக்கப்பட்டுவிடும்: திமுக வேட்பாளா் ஒ.ஜோதி

திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீக்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்து செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வாக்கு சேகரித்தாா்.
Updated on
1 min read

திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீக்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்து செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வாக்கு சேகரித்தாா்.

தொகுதிக்கு உள்பட்ட வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், சேராம்பட்டு, வடுகப்பட்டு, முகத்தான்பூண்டி, ஏனாதவாடி உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அப்போது அவா் பேசுகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீா்ந்து நிம்மதியாக வாழலாம்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சொத்து வரி உயா்வு இருக்காது, தோ்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், ஜே.கே.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வீ.பாஸ்கரன், எஸ்.வி.சுப்பிரமணி, நகரச் செயலா் ஆ.மோகனவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com