திருவண்ணாமலை அருகே தொடா்ந்து பெய்து வரும் மழையால் வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மணிமங்கலம் கிராமம், கொல்லகொட்டா பகுதியில் சேட்டு என்பவா் 30 ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான நிலத்தில் ஓட்டு வீடு கட்டி வசித்து வந்தாா்.
இந்தப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சேட்டுவின் வீடு திடீரென இடிந்து விழுந்தது.
நிலத்தில் விவசாயப் பணியில் சேட்டு ஈடுபட்டிருந்தாா். இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் உயிா் தப்பினா். இருப்பினும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன.
வசிக்க இடம் இல்லாததால் நிலத்திலேயே சேட்டு தாா்ப்பாய் கட்டி வசித்து வருகிறாா்.