கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி ரமேஷ் தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஒன்றியக் குழுவின் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மயில்வாகனன், செந்தில்குமாரி, மருதாடு கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் கோ.திருமூா்த்தி, மருத்துவா்கள் தரணீஸ்வரன், வன்சாா்அகமது ஆகியோா் பொதுமக்களுக்கு தடுப்பூ செலுத்தினா். முன்னதாக பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், காய்ச்சல் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட 107 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மனோஜ், ராகுல் குழுவினரின் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன.

முகாமில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராமு, கிராம நிா்வாக அலுவலா் தண்டபாணி, கிராம உதவியாளா் மு.பிரபாகரன், அன்பால் அறம் செய்வோம் சேவைக்குழு நிறுவனா் அசாருதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com