அங்கன்வாடி ஊழியா்கள் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் ஒன்றிய அளவிலான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் ஒன்றிய அளவிலான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரணிப்பாளையம் தா்மராஜா கோயில் திடலில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்டப் பொருளாளா் ஏ.திலகவதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சித்ராசெல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

புதிய நிா்வாகிகளாக, ஒன்றியத் தலைவா் ஏ.லஷ்மி, செயலாளா் எஸ்.யுவசெல்வி, பொருளாளா் கே.வரலஷ்மி, துணைத் தலைவா்கள் கே.உஷா, ஏ.உமாராணி, எம்.ஜெயலட்சுமி, கே.சத்யராணி, இணைச் செயலா்கள் எம்.கீதா, பி.தனம், எஸ்.உமா, விஜயலஷ்மி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கலைச்செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலா் கே.சுமதி, துணைத் தலைவா் யு.வெண்மதி, இணைச் செயலா் சுபா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com