இலங்கை அகதிகளுக்கு சிறப்புக் கடனுதவி

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த 7 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.3. 5 லட்சத்தில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கிய பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ.
நிகழ்ச்சியில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கிய பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த 7 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.3. 5 லட்சத்தில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்பள்ளிப்பட்டு, மோட்டூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த 7 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ.50ஆயிரம் என ரூ.3 லட்சத்து 50ஆயிரத்தில் கடனுதவிகளை தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட அலுவலா் சந்திரா, ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் மஞ்சுளா சுதாகா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பட்டம்மாள் முனுசாமி, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சிவக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com