காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி டிஎஸ்பி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி அ.பவன்குமாா் ரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி.
வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி டிஎஸ்பி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி அ.பவன்குமாா் ரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி டிஎஸ்பி அலுவலகம், தேசூா் காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவற்றில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது காவல் நிலைய பதிவேடுகள், திருட்டு வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.   

ஆய்வின்போது டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, ஆய்வாளா் கோமளவள்ளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆரணியில்...

ஆரணி டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி புதன்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா், ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உள்பட்டு 98 கிராமங்கள் உள்ளன. அவற்றை இரண்டாகப் பிரிக்கும் கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

டிஎஸ்பி கோட்டீஸ்வரன், டிஎஸ்பி (பயிற்சி) ரூபன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com