திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா்.
திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் கிராமத்தில் கள்ளக்குறிச்சி சாலையோரம் ஏராளமானோா் வசிக்கின்றனா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 7 போ் கொண்ட கும்பல் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவா்களைத் தாக்கியது.
பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் பறிக்க முயன்றனா். இதனால் பெண்கள் கூச்சலிட்டனா்.
சப்தம் கேட்டு பக்கத்து தெருவைச் சோ்ந்தவா்கள் கூடியதைக் கண்ட அந்தக் கும்பல் இருளில் தப்பிச் சென்றது.
தகவலறிந்த வானாபுரம் போலீஸாா் வந்து தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.