செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறையினா் பங்கேற்று கோட்டாட்சியா் கி.விமலா முன்னிலையில், அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கோட்டாட்சியா் கி.விமலா தொடக்கிவைத்தாா்.
வட்டாட்சியா் திருமலை, சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் சுபாஷ், தோ்தல் துணை வட்டாட்சியா் துரை, வருவாய் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.