திருவண்ணாமலையில் மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தேரடி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா். காந்தி சிலைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் என்.கிருபானந்த் மாலை அணிவித்தாா்.
அச்சுதா நிதி நிறுவனத் தலைவா் என்.அழகப்பன், மருத்துவா்கள் பா.அபிராமி, இ.ஷா்மிளா, டி.டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.