இலவச பொது மருத்துவ முகாம்: பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடக்கிவைத்தாா்.
இலவசப் பொது மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.
இலவசப் பொது மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.
Updated on
1 min read

திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடக்கிவைத்தாா்.

அருணை மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் எ.வ.வே.குமரன் தலைமை வகித்தாா்.

கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா் வரவேற்றாா்.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.குப்புராஜ் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com