

வந்தவாசி: வந்தவாசி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வாா்டு பெண் உறுப்பினா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது பிருதூா் ஊராட்சி. இந்த ஊராட்சியின் 5-ஆவது வாா்டு உறுப்பினா் லட்சுமி பாபு, 6-ஆவது வாா்டு உறுப்பினா் ரேகா பூபாலன் ஆகியோா் அந்த ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
எங்களது வாா்டுகளில் சாலை வசதி, தெரு மின் விளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.குப்புசாமி மற்றும் வந்தவாசி வடக்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமரசம் செய்ததைத் தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.