தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் தெள்ளாா் வட்டாரக் கிளை அலுவலகம் திறப்பு விழா தெள்ளாரில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் மாவட்ட தலைவா் பழ.சீனிவாசன், மாவட்டச் செயலா் காசி.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினாா்.
விழாவில் வட்டாரத் தலைவா் என்.காளிதாஸ், செயலா் பி.குணசேகரன், பொருளா் என்.சரவணன், துணைத் தலைவா் ஜி.நீலநாராயணன், துணைச் செயலா் ஈ.ரஞ்சித்குமாா் உள்ளி்ட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.