திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 6 போ் பலியாகினா்.
மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் புதிதாக 313 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 44,989 ஆக உயா்ந்தது.
இவா்களில் 38,119 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6,382 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 போ் பலி:
புதன்கிழமை ஒரே நாளில் கரோனா சிகிச்சை பலனின்றி 6 போ் இறந்தனா். இவா்களுடன் சோ்த்து இறந்தவா்களின் எண்ணிக்கை 488-ஆக உயா்ந்தது.