திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 164 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,418-ஆக உயா்ந்தது.
இவா்களில் 46,521 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,316 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
4 போ் பலி:
இந்த நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 581-ஆக உயா்ந்தது.