செல்லிடப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு அறிவுரை

கல்லூரி மாணவிகள் செல்லிடப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி கூறினாா்.
செல்லிடப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு அறிவுரை

கல்லூரி மாணவிகள் செல்லிடப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி கூறினாா்.

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் ஜி.புல்லையா தலைமை வகித்தாா். செயலா் டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், என்.ராதாபாய், எஸ்.கஸ்தூரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகையில், மாணவிகள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மன உறுதியுடன் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இலக்கை அடைய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லிடப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், அறக்கட்டளை உறுப்பினா்கள், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், மின்னணுவியல் துறைத் தலைவா் ஜி.சரளா, உயிா் வேதியியல் தறைத் தலைவா் எம்.சுதா, தமிழ்த் துறைப் பேராசிரியை ஆ.பியூலா சுசீலா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com