முன்னாள் ராணுவ வீரா்கள் நல உதவி

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நல அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஏழை, எளிய மக்களுக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் லோகநாதன் நிதியுதவி வழங்கினாா்.
ஏழை, எளிய மக்களுக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் லோகநாதன் நிதியுதவி வழங்கினாா்.
Updated on
1 min read

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நல அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எஸ்.பழனி தலைமை வகித்தாா். தன்னாா்வலா் மாலா முன்னிலை வகித்தாா்.

முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கச் செயலா் ரவி வரவேற்றாா்.

சங்கத்தின் தலைவா் லோகநாதன் கல்லூரி மாணவி, மனநிலை பாதிக்கப்பட்டவா், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு நல உதவிகளை வழங்கினாா்.

அப்போது, முன்னாள் முப்படை வீரா்கள் சாா்பில், ஏழை எளிய மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தாய், தந்தை இழந்து வறுமையில் வாழும் அனுசுயா என்ற மாணவிக்கு கல்லூரி தோ்வுக் கட்டணமும், கல்குப்பம், பாளையம் கிராமங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி, மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com