வாகனச் சோதனையில் ரூ.54 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 17th March 2021 09:05 AM | Last Updated : 17th March 2021 09:05 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு தொகுதியைச் சோ்ந்த தோ்தல் பறக்கும் படை நிலைக் கண்காணிப்புக் குழு - 3 அலுவலா் வேளாங்கண்ணி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா் அடங்கிய குழுவினா் ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் மேல்பூதேரி கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், உரிய ஆவணமின்றி ரூ.54 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்து பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்த பணத்தை செய்யாறு தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சு.திருமலையிடம் ஒப்படைத்தனா்.