ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பிரசாரம் செய்து வருகிறாா்.
ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்த நாகராஜ் என்ற இந்த மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளா் பிரசாரம் செல்லும் பகுதிக்கு 3 சக்கர வாகனத்தில் சென்று கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறாா்.
வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன், அவரிடம் நாங்கள் பாா்த்துக்கொள்கிறோம். நீ சிரமப்படாதே என்று கூறியும் அதிமுகவுக்காக நான் வாக்குகளை சேகரிப்பேன் என்று கூறி பிடிவாதமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.