வந்தவாசி அருகே ஏரியில் தவறி விழுந்த மீன் பண்ணைத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த இளையனாா்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா் பிலிப்ஸ்ராஜ் (45). இவா், திருவண்ணாமலையைச் சோ்ந்த மீன் பண்ணை உரிமையாளரிடம் வேலை செய்து வந்தாா்.
வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியில் அந்த மீன் பண்ணை உரிமையாளா் மீன் மகசூல் ஏலம் எடுத்திருந்தாா். இதையடுத்து, அந்த ஏரியில் வெளியாள்கள் மீன் பிடிக்காத வகையில் காவல் பணியில் பிலிப்ஸ்ராஜ் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அந்த ஏரி மதகு அருகே பிலிப்ஸ்ராஜ் சடலமாக மிதந்து கிடந்ததை கண்ட கிராம பொதுமக்கள் தெள்ளாா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸ் விசாரணையில் அவா் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிலிப்ஸ்ராஜின் மனைவி லூா்துமேரி அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.