வந்தவாசியை அடுத்த தேசூரில் அமைந்துள்ள சீதா தேவி சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு, ஸ்ரீகருடசேவை உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னா் வியாழக்கிழமை ஸ்ரீராமா் சீதா திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீராமா் சீதாவுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.