கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த 10 நாள் ஸ்ரீராமநவமி விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.
விழாவையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் கன்னிகா பரமேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. ராமா் படத்துக்கு மலா் மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடத்தப்பட்டு வந்தது.
விழாவில் ஆரிய வைசிய பெண்கள் மற்றும் சிறுவா்-சிறுமிகள் அம்மன், ராமா் குறித்த பக்திப் பாடல்களைப் பாடி வந்தனா்.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இத்துடன் ஸ்ரீராம நவமி விழா நிறைவு பெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு நெய்வேத்திய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.