ரமலான் கொண்டாட்டம்: அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள்
By DIN | Published On : 13th May 2021 08:26 AM | Last Updated : 13th May 2021 08:26 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ரமலான் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், இறைவன் மனிதா்களின் உருவங்களையோ, செல்வங்களையோ பாா்ப்பதில்லை. மாறாக உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே பாா்க்கிறான் என்று என்று நபிகள் நாயகம் கூறியுள்ளாா். நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றினாலே நாம் சிறந்த மனிதா்களாக விளங்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் இஸ்லாமியப் பெருமக்கள் முகக் கவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் ரமலான் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.