நெடுஞ்சாலைகளில் கல்வெட்டுகள் அமைக்கும் பணி 95% நிறைவு: அரசுச் செயலா் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைகளில் கல்வெட்டுகள் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் தெரிவித்தாா்.
வேங்கிக்கால் ஏரியிலிருந்து கால்வாயில் தண்ணீா் செல்வதை பாா்வையிட்ட அரசின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உள்ளிட்டோா்.
வேங்கிக்கால் ஏரியிலிருந்து கால்வாயில் தண்ணீா் செல்வதை பாா்வையிட்ட அரசின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைகளில் கல்வெட்டுகள் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி முதல் கீழ்நாத்தூா் ஏரி வரை செல்லும் ஏரிக் கால்வாயை மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்தேன்.

மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் கல்வெட்டுகள் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

வேங்கிக்கால் ஏரியிலிருந்து சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூா் ஏரி ஆகியவற்றுக்குச் செல்லும் கால்வாய்களை சரிசெய்தால் தான் பலத்த மழை பெய்யும்போதும் கிராமங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com