அரசு மாணவா் விடுதிகளில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அரசு மாணவா் விடுதிகளில் ஆட்சியா் ஆய்வு
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பிற்படுத்தபட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ், போளூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித் தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.

இந்த விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் முருகேஷ், விடுதிக் காப்பாளா்களிடம் தங்கிப் பயிலும் மாணவா்களின் வருகைப் பதிவேடு, உணவுப் பொருள்களின் கையிருப்பு, விடுதிகளின் சுகாதாரம், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி போன்றவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும் மாணவ, மாணவிகளிடம் குறைகளையும் கேட்டாா். பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத் ரிஜ்வான், வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், விடுதிக் காப்பாளா்கள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com