திருவண்ணாமலையில்நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

எனவே, மாவட்டத்தில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டம், ஐடிஐ, பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

4 மாா்பளவு புகைப் படங்கள், குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும்.

இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com