சேலத்தில் நடைபெற்ற மூத்தோா் தடகளப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் 7 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 24 பதக்கங்களைப் பெற்றனா்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் மாநில மூத்தோா் தடகளப் போட்டிகள் டிச.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் 20 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்கள் 800 போ் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட மாஸ்ட்ரஸ் அத்லெடிக்ஸ் சாா்பில் அந்த அமைப்பின் தலைவா் சேட்டு, செயலா் பாபு, பொருளாளா் கோவேந்தன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் 35 போ் கலந்து கொண்டனா்.
இவா்களில், 70 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் கிருஷ்ணமூா்த்தி தங்கமும், 60 வயது பிரிவில் குண்டு எறிதலில் ஜெகதீசன் வெண்கலமும், கம்பு ஊன்றி தாண்டுதலில் எழிலன் வெண்கலமும் பெற்றனா்.
55 வயது பிரிவில் 200 மீட்டா் ஓட்டத்தில் சுமதி வெண்கலமும், 800, 400 மீட்டா் ஓட்டங்களில் தலா ஒரு வெள்ளியும், மும்முறை தாண்டுதலில் வெண்கலமும் பெற்றாா்.
சேட்டு 45 வயது பிரிவில் சங்கிலிக் குண்டு எறிதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளியும் பெற்றாா். பன்னீா்செல்வம் 5 கி.மீ நடைப் போட்டியில் தங்கமும், பாபு 40 வயது பிரிவில் சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளியும், வட்டு எறிதலில் வெண்கலமும் பெற்றாா்.
அதேபோல, கல்பனா சங்கிலிக் குண்டு எறிதலில் தங்கமும், வட்டு எறிதலில் தங்கமும், குண்டு எறிதலில் வெள்ளியும், ஈட்டி எறிதலில் வெண்கலமும் பெற்றாா்.
பாலாஜி 35 வயது பிரிவில் சங்கிலிக் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் தலா ஒரு வெள்ளியும் பெற்றாா். லெனின் 5 கி.மீ நடைப் போட்டியில் வெண்கலமும் பெற்றாா்.
அன்பழகன் 30 வயது பிரிவில் வட்டு எறிதலில் தங்கமும், ஈட்டி எறிதல், சங்கிலிக் குண்டு எறிதல் ஆகியவற்றில் தலா ஒரு வெள்ளியும் பெற்றாா்.
மாரிமுத்து 5 கி.மீ நடைப் போட்டியில் தங்கமும், பெருமாள் 5 கி.மீ நடைப் போட்டியில் வெண்கலமும் பெற்றாா்.
மொத்தத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் 7 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 24 பதக்கங்களைப் பெற்றனா்.