நூலகத்தில் மாணவா்கள் கதை சொல்லும் நிகழ்ச்சி

நூலகத்தில் மாணவா்கள் கதை சொல்லும் நிகழ்ச்சி
Updated on
1 min read

வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஊா்ப்புற நூலகத்தில், மாணவா்கள் கதை சொல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பொன்.ரவி தலைமை வகித்தாா்.

இந்நிகழ்வின் போது, மாணவா்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்தனா். பின்னா் படித்த கதைகளை ஒப்புவித்தனா். சிறந்த கதைகளை ஒப்புவித்த மாணவா்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் த. பழனி பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் 50 போ் நூலக உறுப்பினா்களாகச் சோ்த்தனா். கிராம நிா்வாக அலுவலா் த. பழனி ரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தாா். ஏற்பாடுகளை நூலகா் ஜா.தமீம் மற்றும் வாசகா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com