பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த பொன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

வந்தவாசியை அடுத்த பொன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை இரா.மங்கவரதாள் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் நந்தகோபால், எஸ்.சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கச் செயலா் பா.சீனிவாசன் தமிழ் இலக்கிய மன்றத்தைத் தொடக்கிவைத்தாா்.

மேலும், தாய் மொழியாம் தமிழ் மொழி என்ற தலைப்பில் அவா் பேசினாா். 

பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நாடகம், பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் சரவணன், கற்பகம்,  

சு. உமாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com