பள்ளி மாணவி கடத்தல்:இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த சேவூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் தனது உறவினரின் மகளை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வளா்த்து வந்தாா். அந்தச் சிறுமி ஆரணியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதனிடையே, அந்த மாணவியை கடந்த 26-ஆம் தேதி சாணாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ் கடத்தி சென்றுவிட்டாராம். இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், விக்னேஷும், அந்த மாணவியும் சனிக்கிழமை மாலை ஆரணி பேருந்து நிலையத்தில் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற ஆரணி நகர போலீஸாா் விக்னேஷை கைது செய்தனா். அவருடன் இருந்த மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com