திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் 19-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு செங்கம் சதுா்த்தி விழாக் குழு சாா்பில் தட்சிணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.