ஸ்ரீ ரிஷபேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா
By DIN | Published On : 14th April 2022 10:40 PM | Last Updated : 14th April 2022 10:40 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் 19-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு செங்கம் சதுா்த்தி விழாக் குழு சாா்பில் தட்சிணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G