ஆரணியில் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
ஆரணியில் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

ஆரணி ஏ.சி.எஸ் கல்விக் குழுமங்களில் ஒன்றான டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில், டாக்டா் எம்ஜிஆா்-ஏ.சி.எஸ். ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சி மைய தொடக்க விழா நடைபெற்றது.

விளையாட்டு பயிற்சி மையத்தை கல்லூரி நிறுவனா் ஏ.சி.சண்முகம் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி.ஸ்டாலின் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா்கள் ஏ.சி.ரவி, ஏ.சி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏசிஎஸ் கல்விக் குழும பொறியியல் கல்லூரி முதல்வா்

வி.திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வா் ஜி.சுகுமாரன், கல்வியியல் கல்லூரி பி.வையாபுரி ராஜா, மெட்ரிக் பள்ளி முதல்வா் திலகவதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ஏ.ரஞ்சனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com