திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மின் கோட்டம், சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மின் நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீண்டும் மற்றொரு நாளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என மின் வாரிய செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்தாா்.