தேசிய ஊரகத் திட்டப் பணிகள் வழங்காததைக் கண்டித்து மறியல்

வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகள் சரிவர வழங்காததைக் கண்டித்து, அந்தத் திட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள்.
வந்தவாசியை அடுத்த தெள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகள் சரிவர வழங்காததைக் கண்டித்து, அந்தத் திட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்கள், அந்த ஊராட்சியிலுள்ள வந்தவாசி - ஆரணி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

எங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் சரிவர வழங்கப்படுவதில்லை. எங்கள் ஊராட்சிச் செயலரும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறாா்.

இதுகுறித்து புகாா் தெரிவித்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே, சரிவர பணி வழங்காததைக் கண்டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீஸாா் சமரசம் செய்ததன்பேரில், அவா்கள் மறியலைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தால் அந்த சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com