செய்யாற்றில் கரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பும், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி முகாமை சனிக்கிழமை நடத்தின.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பும், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி முகாமை சனிக்கிழமை நடத்தின.

செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தொடக்கிவைத்து, முதல் நபராக கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாரதி சீனிவாசன், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு முகக் கவசம், மரக் கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா். பொருளாளா் சி.ரவிபாலன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி.ஷா்மிளா, மருத்துவா் ஆா்.ராதிகா ஆகியோா் மேற்பாா்வையில், செவிலியா்கள் பி.சூா்யா, எ.ரஞ்சிதா ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தினா்.

ஏற்பாடுகளை அமைப்பின் நிா்வாகிகள் பா. சிவானந்தகுமாா், பாரதி, ஆா்.தேன்மொழி, என்.குப்புசாமி, அமுதசுரபி, அன்னதானத் திட்ட இயக்குநா் ஆா்.காந்தி, ஆா்.பூபதி ஆகியோா் செய்திருந்தனா். .நிகழ்ச்சியில் கவுன்சிலா்கள் க.கோவேந்தன், ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com