மகளிா் குழுவினருக்கு நலத் திட்ட உதவி

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி, அனக்காவூா் ஒன்றியத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
Updated on
1 min read

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி, அனக்காவூா் ஒன்றியத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாநில ஊரக வளா்ச்சித் துறை மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஓ.ஜோதி தலைமை வகித்தாா்.

அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், திட்டமேலாளா் மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் வரவேற்றாா்.

பின்னா் நடைபெற்ற நிகழ்வில் எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பயனாளிகளான சுய உதவிக் குழு பெண்கள் 13 பேருக்கு, ஒவ்வொருவருக்கும் ரூ. 9 ஆயிரம் கடனுதவியில் மூன்றாயிரம் நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேலாளா் கிரிஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கமலக்கண்ணன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியத் தலைவா் வி.பாபு, ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com