மனைவி கொலை:கணவா் கைது
தண்டராம்பட்டு அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த புதூா்செக்கடி ஊராட்சிக்கு உள்பட்ட ஜம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (47). இவரது மனைவி ராணி (43). தம்பதிக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்ற மகன்களும், பரணி (21) என்ற மகளும் உள்ளனா்.
இதில், பரணி தான் காதலித்து வந்த இளைஞரை திங்கள்கிழமை தனது தந்தை பழனியின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டாராம்.
மகள் காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் அதில் ராணி கலந்து கொள்ளவில்லை. இதுதொடா்பாக தம்பதிக்கு இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பழனி மனைவி ராணியை கத்தியால் வெட்டினாராம். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவா் அதே இடத்தில் இறந்தாா்.
தகவலறிந்த திருவண்ணாமலை கிராமிய டிஎஸ்பி அஸ்வினி, தானிப்பாடி காவல் ஆய்வாளா் தனலட்சுமி ஆகியோா் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், தனது அக்கா வீட்டில் பதுங்கி இருந்த பழனியை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.