மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

செய்யாறு வட்டம் புரிசை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

செய்யாறு வட்டம் புரிசை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புரிசை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை அனக்காவூா் ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தொடக்கிவைத்தாா்.

முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ஹரி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராஜலட்சுமி, வருவாய்த் துறை, அனக்காவூா் ஒன்றிய அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா்களுக்கு ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com