வள்ளலாரின் 200-ஆவது ஆண்டு விழாவையொட்டி, செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.21) சிறப்பு அன்னதானம் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவையேற்று, வேதபுரீஸ்வரா் கோயிலில் டிச.21 (புதன்கிழமை) முதல் டிச.24-ஆம் தேதி வரை தினசரி மதியம் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதான திட்ட நிகழ்ச்சியை தொகுதி எம்எல்ஏ
ஒ.ஜோதி, சாா் -ஆட்சியா் ர.அனாமிகா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் தொடக்கிவைக்கின்றனா்.