82 கிராமங்களில் திட்டப் பணிகள்

அனக்காவூா் ஒன்றியத்தில் உள்ள 82 கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனக்காவூா் ஒன்றியத்தில் உள்ள 82 கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருணா துரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.ஆா்.ரவி, கே.அரி, பொறியாளா்கள் ராம், முனியப்பன், மேலாளா் கிரிஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது, 82 கிராமங்களில் நடைபாதைகள் அமைத்தல், தாா்ச் சாலைகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், கழிவுநீா்க் கால்வாய்கள் அமைத்தல், நெல் களங்கள் கட்டுதல் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com