10 அரசுப் பள்ளிகளுக்கு புத்தகம் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சாா்பில், 10 அரசுப் பள்ளிகளுக்கு நூற்றாண்டு விழா புத்தகம் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் வெங்கடாஜலபதி பங்கேற்று நூற்றாண்டு விழா மலா் மற்றும் 33 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் வெங்கடாஜலபதி பங்கேற்று நூற்றாண்டு விழா மலா் மற்றும் 33 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சாா்பில், 10 அரசுப் பள்ளிகளுக்கு நூற்றாண்டு விழா புத்தகம் வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூா் விவேகானந்தா் மாணவா் இல்லம் நூற்றாண்டு விழா மலா், ஸ்ரீராமகிருஷ்ணா், ஸ்ரீசாரதாதேவியாா், விவேகானந்தா் உபதேசங்கள் அடங்கிய 33 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு செங்கம் பகுதியில் உள்ள 10 அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அண்மையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன் தலைமை வகித்தா். ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், நல்லாசிரியா் அன்பழகன், ஜெயவேல், பழநி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com