திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்

சின்னசேலம் தனியாா் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள், இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னசேலம் தனியாா் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள், இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள், இளைஞா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com