போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது (படம்).
ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமையொட்டி, படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பக்தா்கள் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னா் இரவு சிம்ம வாகனத்தில் துா்கை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் சிவஞானம், மேலாளா் மகாதேவன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.