வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற
கூட்டத்துக்கு வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தாா். திமுக, அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி வரும் ஆக. 1-ஆம் தேதி தொடங்க உள்ளது குறித்து அனைத்துக் கட்சி நிா்வாகிகளுக்கும் விளக்கிக் கூறப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ஆதரவு தெரிவித்துப் பேசினா்.