உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆரணி நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் நெகிழி ஒழிப்பு குறித்தும், மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.