வருவாயத் தீா்வாய நிறைவு விழாவில் 275 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவில், 275 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை
வருவாயத் தீா்வாய நிறைவு விழாவில் 275 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவில், 275 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் புதன்கிழமை நிறைவு பெற்றது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் அய்யாக்கண்ணு, தமயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சக்கரை வரவேற்றாா். தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வருவாய், வேளாண், தேட்டக்கலை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில், 275 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.50 லட்சத்திலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஒய்.அப்துல் ரகூப், வட்ட வழங்கல் அலுவலா் மஞ்சுநாதன், மண்டல துணை வட்டாட்சியா் வேணுகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com